யார் சொன்னது ?
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
விலங்கின் அறிவை
விலை கொடுத்து வாங்கும் . . .
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
சந்தோஷமென்று எண்ணி
சாக்கடையில் புரளும் . . .
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
மனைவியையும் மக்களையும்
மனதார அனாதையாக்கும் . . .
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
முகுளத்தை சருகாக்கி
முடிவாக்கும் முட்டாளான . . .
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
சம்பாத்தியத்தை சாராயமாக்கி
சந்தோசத்தை மாயையாக்கும் . . .
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
கருமாதியா?
சாராயம் வேண்டும் !
காத்து குத்து விழாவா ?
சாராயம் வேண்டும் !
கல்யாணமா?
சீமை சாராயம் வேண்டும் !
உன்னை எரிக்க
எரு வேண்டாம் !
இதத்தனையும் போதும் !
மனைவியின் மஞ்சள் குங்குமத்தை
மதுவால் அழிக்கும் மாபாவி . . .
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
அடிமை கழிவே !
உயர்வான வாழ்வை தேடு !
உன்மத்த நிலை உன்னை அழிக்கும்!
போதையின் பாதையில் சாவை தேடாமல்
சாதனைப்பாதையில் வாழ்வை தேடு!
மானிடப்பிறவி அரிதென்ற
மாபெரும் உண்மை தேடு!
போதையின் பாதை பேதையாக்கும்!
மதுவை தேடாமல் மகிழ்வை தேடு !
இரத்தம் உருக்கி
உன் தாய் சுரந்தது பாலென்றால்
இரத்தம் குடிக்கும்
மதுவை விடு!
உன் தாய் சுரந்தது பாலென்றால்
இரத்தம் குடிக்கும்
மதுவை விடு!