Saturday, March 5, 2011

யார் சொன்னது ?

யார் சொன்னது ?

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .  

யார் சொன்னது? 

விலங்கின் அறிவை 
விலை கொடுத்து வாங்கும் . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .


யார் சொன்னது?

சந்தோஷமென்று எண்ணி 
சாக்கடையில் புரளும் . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?

மனைவியையும் மக்களையும் 
மனதார அனாதையாக்கும் . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?

முகுளத்தை சருகாக்கி 
முடிவாக்கும் முட்டாளான . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?

சம்பாத்தியத்தை  சாராயமாக்கி 
சந்தோசத்தை மாயையாக்கும் . . . 

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?


கருமாதியா?
சாராயம் வேண்டும் !

காத்து குத்து விழாவா ?
சாராயம் வேண்டும் !

கல்யாணமா?
சீமை சாராயம் வேண்டும் !

உன்னை எரிக்க 
எரு வேண்டாம் !
இதத்தனையும் போதும் !



மனைவியின் மஞ்சள் குங்குமத்தை 
மதுவால் அழிக்கும் மாபாவி . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?


அடிமை கழிவே !
உயர்வான வாழ்வை தேடு ! 
உன்மத்த நிலை உன்னை அழிக்கும்!

போதையின் பாதையில் சாவை தேடாமல் 
சாதனைப்பாதையில் வாழ்வை தேடு!

மானிடப்பிறவி அரிதென்ற 
மாபெரும் உண்மை தேடு!

போதையின் பாதை பேதையாக்கும்!
மதுவை தேடாமல் மகிழ்வை தேடு !


இரத்தம் உருக்கி 
உன் தாய் சுரந்தது பாலென்றால் 
இரத்தம் குடிக்கும் 
மதுவை விடு!