Monday, October 1, 2012

பழனிக்கு போனாக்கா !



ஏலே! கவுசிக்!
எங்கடா  ஒங்கப்பன்!

பர்ஸ மறந்து வச்சுட்டு 
பாதியில வுட்டுட்டு போனா 
பொழுது சாயுறதுக்குள்ள 
பழனிக்கு போறதெப்போ?

கோயில் நட சாத்துறதுக்குள்ள 
கோயிலுக்கு போறதெப்போ?


அவுக  பர்ஸ மறந்துட்டு  வந்தா 
அது எல்லாமே நல்லதுக்கு!
நாம எதையாவது விட்டுட்டு வந்தா 
நான் என்னத்த சொல்றதுக்கு?


ராத்திரிக்கு ராத்திரியே 
பெட்ரோலு  போட்டு வெச்சா 
காரை எடுத்துகிட்டு 
காலையிலே போயிருக்கலாம்!


வந்துட்டாக! வந்துட்டாக!
வெரசாவே வந்துட்டாக!
மவராசா காரை எடுங்க! 
மனசு நொந்து போறதுக்குள்ள!


வெள்ளன டிபன் இட்டிலிக்கு சட்டினி 
எள்ளுப்பொடி எண்ணயோட எடுத்து வச்சேன்!
பகலுக்கு புளியோதரை தொவையலோட 
பொல பொலன்னு செஞ்சி வச்சேன்!


வேளா வேளை வித விதமா 
ஆளாளுக்கு ஆக்கிவெச்சா 
நாவ சுழட்டிக்கிட்டு 
நல்லாத்தான் தின்பாக!


நல்லாத்தான் இருந்துச்சுன்னு 
நாலு வார்த்த அவுக சொன்னாக்க 
நாவுல முத்து உதுந்துவிடும்!
நடுத்தல கிரீடம் அவுந்துவிடும்!


பழனி மலையேறி அந்த 
பார்வதி புள்ளைய பார்த்துபுட்டா 
வேலை கிடைக்கணும்னு 
வேண்டுதல சொல்லிபுடலாம்!


பழனிக்கு வரும்போது மணி 
பதுன்னொன்னு ஆகிடுச்சு!
வேலன பார்க்கப்போக 
விஞ்ச் வழி மூடிருச்சு!


ஆனைப்பாதை படியேறி 
பூனைநடை நடந்தேற 
மொதப்பாதி மேல்மூச்சு!
அதில்பாதி கீழ்மூச்சு!


ஒக்காந்து ஒக்காந்து 
ஒசரத்துக்கு போனாக்க 
நடைய சாத்திட்டாக!
நேர்வழி மாத்திட்டாக!


நூறுரூவா டிக்கெட்டு மொகத்துக்கு 
நேரா முருகன பார்க்கலாம்!
பத்து ரூவா டிக்கெட் எடுத்து 
படியோட திருப்பிட்டாக!


பஞ்சாமிர்தமும் பிரசாதமும் 
அஞ்சாறு வாங்கிட்டாக!
பாதசூடு தாங்கலையே! தூக்கிவிட 
ஓடியாங்க! ஐயோ! விழுந்துட்டாக!


கொற கேட்டு கொற கேட்டு 
குமரன் காது செவுடாப்போச்சு!
நேர்ச்ச நேந்து பழநிபோயும் 
என்கொற தீராமப்போச்சு!


ஆண்டிகிட்ட எதகேட்டு 
வேண்டிக்கிட்டு பெறப்போறேன்?
அஞ்சுரூவா அவனுக்குன்னு 
உண்டியல்ல போட்டுட்டு வந்தேன்!


ம்கூம்.... என்னத்த ......?

No comments:

Post a Comment