யார் சொன்னது ?
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
விலங்கின் அறிவை
விலை கொடுத்து வாங்கும் . . .
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
சந்தோஷமென்று எண்ணி
சாக்கடையில் புரளும் . . .
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
மனைவியையும் மக்களையும்
மனதார அனாதையாக்கும் . . .
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
முகுளத்தை சருகாக்கி
முடிவாக்கும் முட்டாளான . . .
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
சம்பாத்தியத்தை சாராயமாக்கி
சந்தோசத்தை மாயையாக்கும் . . .
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
கருமாதியா?
சாராயம் வேண்டும் !
காத்து குத்து விழாவா ?
சாராயம் வேண்டும் !
கல்யாணமா?
சீமை சாராயம் வேண்டும் !
உன்னை எரிக்க
எரு வேண்டாம் !
இதத்தனையும் போதும் !
மனைவியின் மஞ்சள் குங்குமத்தை
மதுவால் அழிக்கும் மாபாவி . . .
உன்னையும்
உயர்வான மனித இனமென்று . . .
யார் சொன்னது?
அடிமை கழிவே !
உயர்வான வாழ்வை தேடு !
உன்மத்த நிலை உன்னை அழிக்கும்!
போதையின் பாதையில் சாவை தேடாமல்
சாதனைப்பாதையில் வாழ்வை தேடு!
மானிடப்பிறவி அரிதென்ற
மாபெரும் உண்மை தேடு!
போதையின் பாதை பேதையாக்கும்!
மதுவை தேடாமல் மகிழ்வை தேடு !
இரத்தம் உருக்கி
உன் தாய் சுரந்தது பாலென்றால்
இரத்தம் குடிக்கும்
மதுவை விடு!
உன் தாய் சுரந்தது பாலென்றால்
இரத்தம் குடிக்கும்
மதுவை விடு!
arumai..vaalththukkal
ReplyDeletethose who read this will definitely leave and forget their drinking habits.
ReplyDeleteyour thoughts are excellent!
very nice words, as chithra akka said its high time to work towards publishing your book.
ReplyDelete