முத்தெடுத்து தருகின்றேன் முத்தமிழில் முழுகி !
செத்துவிட்ட பின்னாலும் செந்தமிழைத் தழுவி !
கொத்தெடுத்து சூடினாலும் குழல்விட்டு நழுவி
பத்தினியா போய்விடுவாள் படிதாண்டி வழுவி!
உடலழுகி போவதற்குள் உறவினர்கள் வந்து
கடலெனவே அழுதாலும் கண்ணீரில் நொந்து
உடலுருகிப் போனாலும் உந்திவிட்ட பந்து
சடலமென ஆனாலும் சாற்றுகிறேன் சிந்து !
விட்டுவிடு தலையாகி விலகுகிறேன் உலகை!
சட்டியுடைத்த பின்னாலே சந்தனத்தில் பலகை!
தொட்டிலிட்டு எனதுடலை தூக்கியது சிலகை!
மட்டையான உடலத்தில் மாரடிப்பில் பலகை !
நால்வருக்கு நன்றிசொல்ல நானுமங்கு இல்லை!
வாழ்வழிந்த உடலிதுவும் வாடிவிட்ட முல்லை!
ஊழ்வினையை அழிப்பதற்குள் உலகமகா தொல்லை!
காழ்மனமாய் இருந்தாலும் கல்லறைதான் எல்லை!
- செத்து விட்ட முத்து கவி -
( இந்த கவிதை 08-06-1987 அன்று ஒரு தனிமை இரவில் கல்லூரி விடுதி அறையில் எழுதியது )
நல்லா இருக்கு தோழர் இன்னும் நல்லா சிந்திங்க அங்கதம் படிமம் புதுகவிதைக்கும் சில இலக்கணம் உண்டு அதையும் தெரிஞ்சிகிங்க
ReplyDeleteநன்றி! எனது இனிய நண்பரே!
ReplyDeleteஇவ்வளவு நாளா எனக்கு காண்பிக்கவே இல்லயே எனக்கு இந்த கவிதையை
ReplyDelete